மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்.
கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பான் மசாலா கடைகள் திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும். இதன் விளைவால் மக்கள் அவதிப்படும் சூழல் ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அனின்திதா மித்ரா வழக்கு ஒன்று தொடுத்து இருந்தார். இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல், பிஆர் கவாய் ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் கூறுகையில், கடைகளில் நேரடியாக மது விற்பனை செய்வதை தவிர்க்க முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளது. பின்னர் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நிற்கும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மது விற்பனை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து அறிவுறுத்த மட்டுமே முடியும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…