ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு உலகின் பிற இடங்களில் உள்ள மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் சார்ஸ்-கோவ் 2 (கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. விலங்குகள் இந்த நோயை மனிதர்களுக்கு மேலும் பரப்ப முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
இந்த மாதிரியான தொற்றானது இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும், டிசம்பர் மாதம் லூயிஸ்வில் மிருகக்காட்சிசாலையில் பனிச்சிறுத்தைக்கும் இருந்தது.
இந்த தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று வகையைச் சேந்தது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு பூனைகள், நாய்கள்போன்ற விலங்குகளுக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) சார்ஸ்-கோவ் -2 குறித்த முழுமையான ஆவணத்தைக் கொடுத்துள்ளது.
அதில் செல்லப்பிராணிகளிடையே செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…