குழந்தையை கழிவறையிலிருந்து தூக்கி வீசிய பெண்னுக்கு ஆயுள்தண்டனை…!

Published by
Rebekal

மும்பையை சேர்ந்த பார்மர் எனும் பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பதாக செய்த குற்றத்திற்காக தற்போது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு பார்மர் எனும் இந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை கழிவறைக்கு எடுத்துச் சென்ற பெண்  ஜன்னலில் இருந்து கீழே போட்டு விட்டார்.

இதனால் குழந்தை தலையில் பலத்த காயமடைந்து அன்றைய தினமே உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த குற்றத்திற்காக பார்மர் எனும் அந்த பெண்ணிற்கு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி குழந்தையை கழிவறையில் இருந்து தூக்கி எறிந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்த குழந்தை உயிர் இழந்து விட்டதால் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்பெண் அதை மறுத்தாலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த பொழுது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அந்த பெண் தனது கட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை என்று பதறி அழுதுள்ளார். அதன் பின் சிசிடிவி காட்சிகளை  ஆராய்ச்சி செய்தபோது, குழந்தையுடன் கழிவறைக்கு சென்ற பெண் வெளியில் வரும் பொழுது குழந்தை இல்லாமல் திரும்பி வந்தது தெரியவந்துள்ளது. உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் இந்த பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

46 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

49 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

54 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

1 hour ago