மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். இந்தநிலையில் மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது பாஜக பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது. இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது.
நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரும் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ஓரிடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…