‘பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைவோம்’ – எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்..!

Default Image

மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். இந்தநிலையில் மம்தா பானர்ஜி அவர்கள் பாஜக அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது பாஜக பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது. இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது.

நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரும் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ஓரிடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்