உக்ரைனின் கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அளித்த நவீனின் தந்தை சங்கரப்பா, எனது மகன் மருத்துவத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை. நவீனின் உடலை மற்ற மருத்துவ மாணவர்களாவது படிப்புக்கு பயன்படுத்தலாம். இதனால் நவீன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
நவீன் உடல் நாளை வருகிறது:
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஷ்யா-உக்ரைன் துப்பாக்கிச் சண்டையின் போது உயிரிழந்த நவீனின் உடல் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு உக்ரைனில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை வந்தடையும் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது நவீன் உடல் நாளை வரும் என அரசு அறிவித்தது. நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நவீன் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்:
நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மகனின் உடல் கிராமத்திற்கு வந்து சேரும் என நவீனின் தந்தை தெரிவித்தார். பிறகு சடங்குகள் முடித்த பின்னர் மருத்துவப் படிப்புக்காக தாவங்கேரி எஸ்எஸ் மருத்துவமனைக்கு உடலை தானம் செய்வதாக கூறினார். நவீன் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளைமறுநாள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…