“பாஜகக்கு அஞ்சுபவர்கள் காங்கிரஸில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று விடுங்கள்” – ராகுல் காந்தி

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜகவை எதிர்கொள்ள தயங்கினால் வெளியேறலாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவை சேர்ந்த உறுப்பினர்களிடம் காணொளி வாயிலாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான ராகுல் காந்தி, பாஜகவை பார்த்து அஞ்சுபவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று விடுங்கள். காங்கிரசுக்கு அச்சமற்ற தலைவர்களே தேவை. தைரியமான தலைவர்கள் பலர் வெளியில் உள்ளனர். அவர்களை கட்சிக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அச்சமற்றர்கள் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. அதுவே கட்சியின் சித்தாந்தம் என காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், நாராயண் ராணே, ராதாகிருஷ்ண விக்கி படேல், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை சுட்டிக்காட்டி பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே ஒரு சிலர் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் காங்கிரஸ் தலைமை முழு மூச்சுடன் பாஜகவின் பல ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலையைக் கடுமையாக விமர்சித்து வருகையில் அதை ஆதரிக்கவும் ஒரு சிலர் உள்ளனர் என குறிப்பிட்டார்.

இதனிடையே, பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளம் தொண்டா்களுடனும் அவா் பேசினாா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு தொண்டா்கள் தன்னுடன் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை என்றும் சகோதரரிடம் பேசுவதைப்போல் தன்னிடம் பேசலாம் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைமை கட்சிக்குள் பல அதிரடியான மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மூத்த தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

3 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

4 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

6 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago