ஹோலி என்பது வடஇந்தியாவில் பிரபலமான பண்டிகையாகும், இப்பண்டிகை ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டுமின்றி ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிஜி, மலேசியா,சிங்கப்பூர், யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்தியாவை சேர்ந்த மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ,
ஹோலி பண்டிகை,ஹோலிக்கு முந்தைய நாள் இரவு ஹோலிகா தகனத்துடன் தொடங்குகின்றன,அடுத்த நாள் காலை அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்வர்.பிறகு ஹோலி உணவுகள்,உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.மாலையில், மக்கள் ஆடை அணிந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க செல்வர்.
இந்நிலையில்,ஹோலி பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு, அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நிறத்தை கொண்டு வரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள். பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…