கொரோனோ விவகாரம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு நோய் பரவலை தடுக்க அதிரடியாக விடுமுறை…

Default Image

உலகம் முழுவதும் தனது கோர பிடியில் சிக்கியுள்ள நிலையில் இதில் இந்தியாவும் தப்பவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைப்பேட்டைக்கு வந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து தனி பிரிவில் சிறப்பு மருத்துவர்கள்   சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நெல்லூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், மால்கள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லூர் மாவட்டம்  ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும் அங்கு நடைபெற்று வரும்  ஜிஎஸ்எல்வி ராக்கெட் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்