அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியை ஒரு மிகப் பெரிய விண்கல்லான ‘விண்கல் 2020 ND’ என்பது வரும் ஜூலை 24ம் தேதி கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது மட்டுமின்றி மேலும் 2016 DY30 மற்றும் 2020 ME3 என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு விண்கற்களும் பூமி கிரகத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை தாண்டி செல்லும் என்றும் கூறியுள்ளனர். இந்த விண்கற்களும்’ அபாயகரமான விண்கற்கள்’ (PHA) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாசா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விண்கற்களும் 0.05 வானியல் அலகயோ, அதற்கு குறைவான சுற்று வட்டப்பாதை தூரத்தை கொண்டிருந்தால், அவை அபாயகரமான விண்கற்களாக கருதப்படும் என்று கூறியிருந்தது.
இதில் 170 மீட்டர் நீளமுடைய 2020 ND விண்கல் மணிக்கு 48,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், இந்த விண்கலம் பூமி கிரகத்திற்கு 5,086,328 கிலோமீட்டர் அளவிற்கு அதாவது 0.034 வானியல் அலகுக்கு நெருக்கமாக இருக்கும் என்றும், இது பூமிக்கு அருகே வரும் தூரம் ஆபத்தானது என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், பூமியின் திசையில் 15அடி நீளத்தில் அகலமாக இருக்கும் சிறிய விண்கல்லான 2016 DY30 விண்கல் மணிக்கு 54,000கிலோ மீட்டர் வேகத்திலும், 2020 ME3 என்ற விண்கல் மணிக்கு 16,000 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், 2016 DY30 விண்கல் பூமியை 0.02306 வானியல் அலகில் அதாவது 3.4 மில்லியன் கிலோமீட்டர் வரை நெருங்கி வரும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் ஆய்வு மையமான சி. என். இ. ஓ எஸ் கணித்துள்ளது.
மேலும், பூமியில் இருந்து சுமார் 5.6 மில்லியன் கிலோமீட்டர் அதாவது 0.03791 வானியல் அலகு வரையில் மிக தொலைவில் இருக்கும் 2020 ME3 என்ற விண்கல் பூமியை வரும் ஜூலை 21-ம் தேதி நெருங்கி வரும் என்றும், அந்த இரண்டு பெரிய விண்கற்கள் ஜூலை 19-ம் தேதி காலை 10 அளவில் நெருங்கி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பெரிய விண்கற்களும் சூரியனை சுற்றி பயணம் செய்கையில் பூமியை கடப்பதால் அப்பல்லோ விண்கல் என்றும், பூமியின் பாதையை கடக்காத சிறிய விண்கல்லான 2020 ME3 யை அமோர் விண்கல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…