ஜூலை 24ம் தேதி பூமியை கடக்கும் மிகப்பெரிய விண்கல் .! எச்சரிக்கை விடுத்த நாசா.!

Published by
Ragi

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியை ஒரு மிகப் பெரிய விண்கல்லான ‘விண்கல் 2020 ND’ என்பது வரும் ஜூலை 24ம் தேதி கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது மட்டுமின்றி மேலும் 2016 DY30 மற்றும் 2020 ME3 என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு விண்கற்களும் பூமி கிரகத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை தாண்டி செல்லும் என்றும் கூறியுள்ளனர். இந்த விண்கற்களும்’ அபாயகரமான விண்கற்கள்’ (PHA) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாசா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விண்கற்களும் 0.05 வானியல் அலகயோ, அதற்கு குறைவான சுற்று வட்டப்பாதை தூரத்தை கொண்டிருந்தால், அவை அபாயகரமான விண்கற்களாக கருதப்படும் என்று கூறியிருந்தது.

இதில் 170 மீட்டர் நீளமுடைய 2020 ND விண்கல் மணிக்கு 48,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், இந்த விண்கலம் பூமி கிரகத்திற்கு 5,086,328 கிலோமீட்டர் அளவிற்கு அதாவது 0.034 வானியல் அலகுக்கு நெருக்கமாக இருக்கும் என்றும், இது பூமிக்கு அருகே வரும் தூரம் ஆபத்தானது என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், பூமியின் திசையில் 15அடி நீளத்தில் அகலமாக இருக்கும் சிறிய விண்கல்லான 2016 DY30 விண்கல் மணிக்கு 54,000கிலோ மீட்டர் வேகத்திலும், 2020 ME3 என்ற விண்கல் மணிக்கு 16,000 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், 2016 DY30 விண்கல் பூமியை 0.02306 வானியல் அலகில் அதாவது 3.4 மில்லியன் கிலோமீட்டர் வரை நெருங்கி வரும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் ஆய்வு மையமான சி. என். இ. ஓ எஸ் கணித்துள்ளது.

மேலும், பூமியில் இருந்து சுமார் 5.6 மில்லியன் கிலோமீட்டர் அதாவது 0.03791 வானியல் அலகு வரையில் மிக தொலைவில் இருக்கும் 2020 ME3 என்ற விண்கல் பூமியை வரும் ஜூலை 21-ம் தேதி நெருங்கி வரும் என்றும், அந்த இரண்டு பெரிய விண்கற்கள் ஜூலை 19-ம் தேதி காலை 10 அளவில் நெருங்கி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெரிய விண்கற்களும் சூரியனை சுற்றி பயணம் செய்கையில் பூமியை கடப்பதால் அப்பல்லோ விண்கல் என்றும், பூமியின் பாதையை கடக்காத சிறிய விண்கல்லான 2020 ME3 யை அமோர் விண்கல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

Published by
Ragi

Recent Posts

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

7 minutes ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

1 hour ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

2 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

2 hours ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

2 hours ago

மழைக்கு வாய்ப்பு முதல் வெப்ப நிலை வரை! வானிலை குறித்து ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago