Categories: இந்தியா

லேப்டாப் போராட்டம் : மாணவர்கள் மடியில் அபரந்து போராட்டம்..!

Published by
லீனா

கேரளாவில் மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் சிஇடி என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அசோசியேசன் சார்பில் நிழல் கொடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சிலர் அசோஸியேஷனில் புகார் அளித்தனர். இதனை எடுத்து அசோசியேசன் சார்பில் அந்த நிழற்குடையில் உள்ள பென்ஞ்ச்போன்ற இருக்காய் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக மூன்று இருக்கைகள் இடைவெளி விட்டு புதிதாக அமைக்கப்பட்டிருந்தன.

இந்த மாற்றம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நிழற்குடைக்கு  சென்ற மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மடியில் மாணவிகளும்,  மாணவிகள் மடியில் மாணவர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த போராட்டம் லேப்டாப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சென்று மாணவ மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின் பேசிய அவர், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இப்பிரச்சினையை தெரிந்து கொண்டதாகவும் இது சரியான செயல் அல்ல என்பதால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்ததாகவும் தெரிவித்தார். அந்த பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்படும் என்றும், அதில் ஆண் பெண் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago