ராஜமாலா அருகே தேயிலை தோட்டப் பணியாளர்கள் தங்கி இருந்த பகுதியில் இன்று அதிகாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், ராஜமாலா அருகே தேயிலை தோட்டப் பணியாளர்கள் தங்கி இருந்த பகுதியில் இன்று அதிகாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்போர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலை தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், மீட்டுப்படையினர், வனத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையின் குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் மழையும், காட்டாற்று வெள்ளமும் செல்வதால் மீட்புப்படையினர் பெரும் சிரமமாக உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 80 பேர் இப்பகுதியில் தங்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் தோட்டத் தொழிலாளர்களின் இருபது வீடுகளும் இடிந்து சிக்கி உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…