Categories: இந்தியா

உத்தரகாண்டில் நிலச்சரிவு: 4 மாத குழந்தை உட்பட 4 பேர் பலி!

Published by
கெளதம்

கடந்த சில மாதங்களாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள சம்பா என்ற இடத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண்கள் மற்றும் 4 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த பகுதியில் இருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி நவ்நீத் சிங் புல்லரைட் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும்,ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும், சம்பா மற்றும் மண்டி மாவட்டங்களின் வெள்ள அபாயம் இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

11 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

15 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

16 hours ago