லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைப்பு!

Default Image

முகமது பைசலின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் ஆணையம். 

லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27-ல் நடக்கவிருந்த லட்சத்தீவு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். லட்சத்தீவு தொகுதி எம்பி முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கு ஒன்றில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது. முகமது பைசலின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனதை அடுத்து அங்கு இடைத்தேர்தலை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.

தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், முகமது பைசலின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் ஆணையம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்