லட்சத்தீவு பிரச்சனை குறித்து உயிரியல் ஆயுதம் என்ற கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவை சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. இவர் பல மலையாள படங்களின் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். திரைப்பட இயக்குநர், மாடல் மற்றும் நடிகையாக விளங்கும் ஆயிஷா சுல்தானா மலையாள தொலைக்காட்சி விவாதத்தில், லட்ச தீவில் கொரோனாவை உயிரியல் ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது என்ற கருத்தை தெரிவித்தார்.
இவர் கூறியிருப்பது அரசுக்கு எதிரான செயல் என்று அங்குள்ள பாஜகவினர் ஆயிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா மீது புகார் அளித்துள்ளார். ஆனால் ஆயிஷா மீது வழக்கு பதியவில்லை. இதன் காரணத்தால் பாஜகவினர் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அங்கு போராட்டம் நடத்தினர்.
பின்னர் லட்சத்தீவு போலீசார் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக குற்றம், வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…