ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி சூடு ..!தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ சுட்டுக்கொலை ..!முன்னாள் எம்எல்ஏ படுகாயம் ..!

Default Image

ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சட்ட மன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.

ஆந்திர  விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆவார்.இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.இதற்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் .இந்நிலையில்   இவர் அரக்கு தொகுதியில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சிவேரி சோமாவுடன் சென்றுள்ளார்.அப்போது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்துள்ளார் .

அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சிவேரி சோமா  படுகாயம் அடைந்துள்ளார்.இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்