குலபூஷண் ஜாதாவ் விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், அவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது.? – பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் (50) உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017இல் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.
சர்வதேச நீதிமன்றமானது ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவருக்கு தூதரக அனுமதி கிடைக்கப் பெற வேண்டும் எனவும் 2019 ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மறுஆய்வு செய்ய குல்பூஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக பாகிஸ்தான் அரசு இந்த வழக்கு நடைபெறும் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு அளித்தது. மேலும், கருணைக்காக அவர் மேல் முறையீடு செய்ய விரும்புவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையானது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதிகள் அதர் மினால்லா மற்றும் மியங்குள் ஹாசன் ஒளரங்கசீப் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாணைக்கு வந்தது. அவர்கள், இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், குலபூஷண் ஜாதாவுக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது என கூறி இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…