கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

Published by
murugan

உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி,  ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில்  மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்று இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் இந்துக் கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம் என்றும் மசூதி  அமைந்துள்ள பகுதி கோவில் இருந்ததற்கான பல்வேறு தடயங்கள் இருப்பதாகவும் இதுகுறித்து அறிவியல் ஆய்வு உத்தரவிட வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணன் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மதுரா நீதிமன்றத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது.

1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

இதைத்தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றது. அப்போது, ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த  அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மசூதியும், கோயிலும் அக்பரால் 1585 இல் தீன்-இ-இலாஹியின் கீழ் கட்டப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். 1669-ல் முகலாய மன்னன் ஔரங்கசீப் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக இந்து தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றன. ஔரங்கசீப் தீன்-இ-இலாஹிக்கு எதிரானவர் என்றும் அதனால் கோவிலை இடிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார் என பலர் கூறி வருகின்றனர்.

1582-ஆம் ஆண்டு அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் “தீன் இலாஹி” என்ற மதத்தை அக்பர் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

6 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

7 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

8 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

9 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

10 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

10 hours ago