திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தபட்ட வழக்கை பிரதமர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் சோதனை நடத்திய போது சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தற்போது கேரள மாநில அரசு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய அரசு கவனத்தில் கொண்டு மத்திய குற்றப்பிரிவு துறையினர் விசாரிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ கடந்த 5ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள விமான நிலையத்தில் 30 கிலோ மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 30 கிலோ அளவிலான தங்க கடத்தலானது, நாட்டினுடைய வர்த்தக வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனால், இந்த வழக்கை தீவிரமாக விசாரிப்பதற்கு மத்திய குழு முன்வரவேண்டும். தற்போது மத்திய குழுவின் விசாரணையை உரிய தேவையாக உள்ளது. என்பதை குறிப்பிட்டுள்ளார். அதற்காக மாநில அரசு அனைத்து உதவிகளையும் அந்த மத்திய குழுவிற்க்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து பிரதமர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…