கேரளா…!சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிப்பு …!

Default Image

சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது.திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 5-ந் தேதி நடை திறந்து, 6-ந் தேதி சாத்தப்பட்டபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

Image result for 144 sabarimala

இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் சபரிமலையில்  நவம்பர் 16 ஆம்  தேதி நடை திறக்கபட்டது . மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி  சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில்  சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சபரிமலை, பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்