கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள்.
கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் உலக சாதனையை படைத்து முடிந்தது.
அந்த மாணவி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனிடம் கூறுகையில், “கல்லூரியில் எனது ஆசிரியர்கள்தான் என்னை ஆன்லைன் படிப்புகளின் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஆன்லைனில் பல படிப்புகள் உள்ளது. அவை அனைத்தும் கால அளவிலும் பாடத்திட்டத்திலும் வேறுபடுகின்றன. எனது கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி முஹம்மது, கோசெரா ஒருங்கிணைப்பாளர் ஹனீபா மற்றும் வகுப்பு ஆசிரியர் நீலிமா ஆகியோரின் ஆதரவுடன், இந்த படிப்புகளை சில வாரங்களுக்குள் முடிக்க முடிந்தது ” என்று கூறியுள்ளார்.
தற்போது, உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களிலிருந்து ஆரத்தி 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார் என்று அவரது பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…