கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட அளவு டோஸ்கள் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று வரை 94 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
23 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு அம்மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கும் படியாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…