முதியவர்கள் அதிகம் கொண்ட கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் – கேரள சுகாதார துறை மந்திரி மத்திய அரசுக்கு கடிதம்!

Default Image

கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட அளவு டோஸ்கள் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று வரை 94 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

23 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு அம்மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கும் படியாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt