சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்குங்கள்! கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Default Image

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற  தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்திருந்தனர். இதனால், ஏற்கனவே உள்ள தீர்ப்பான, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்லலாம் என்கிற விதிமுறை தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சீராய்வு மனுக்குகளுக்கு முன்னரே சபரிமலைக்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால் சீராய்வு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்காமல் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு,சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் சபரிமலை நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் அமைக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்  எனவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts