கேரளாவில் விமானம் விபத்திற்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல்.
நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானம் எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர். 123 காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விமானம் ,தரையிறங்கும் நேரத்தில், முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து, மீண்டும் 2-வது முறை தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…