கேரளா கோழிக்காடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ள கேப்டன் முன்னாள் இந்திய விமானப்படை பைலட் ஆக பணியாற்றியவர்.
கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீண்டும் இந்திய வரமுடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்காக மத்திய அரசு வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஆயத்தப்படுத்தி நாட்டு மக்களை அழைத்து வர செய்கிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7. 40 மணிக்கு கேரளாவில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. கேரளாவில் நேற்று கனமழை பெய்து வந்ததால் விமானத்தை தரை இறக்க விமானி முயன்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையை தாண்டி விமானம் 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 19 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் விமானம் இரண்டாக பிளந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் இரு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே என்பவர், ஏற்கனவே இந்த ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்வதற்கு முன்பாக இந்திய விமானப்படையில் பைலட்டாக பணியாற்றியவர், இவரின் நேர்மையான பணிக்காக இவருக்கு 58 என்டிஏ தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…