கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் கேரள விமான நிலையத்தில் ஓடுபாதையில் சறுக்கிகொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விபத்தில் முக்கிய தடயங்களை சேகரிக்கும் விமானத்தில் இருந்து கருப்பு விமான பெட்டி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரை நேற்று புலனாய்வாளர்கள் மீட்டனர்.
இதையடுத்து, ஆய்விற்காக கருப்பு பெட்டி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். கருப்பு பெட்டி ஒரு விமானத்தின் நடக்கும் அனைத்து உரையாடல் பதிவையும், உயரம் மற்றும் எரிபொருள் ஓட்டம் போன்ற பதிவுகளையும் பதிவுசெய்தது விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவும் இது உதவுகிறது.
இந்த கறுப்புப் பெட்டி 2000 பாரன்ஹீட் வெப்பத்தில் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எடையுடைய பொருள் விழுந்தாலும், சுமார் 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் கறுப்புப் பெட்டிக்கு ஒன்னும் ஆகாது.எந்த விதமான கோர விபத்து நடந்தாலும், விமானம் முழுமையாக வெடித்து சிதறினாலும் இந்த கருப்பு பெட்டிக்கு மட்டும் எதுவும் ஆகாது, அவ்வளவு பாதுகாப்பு முறையில் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…