இறந்தவருக்கு உயிர் இருப்பதை கண்டுபிடித்த கேரள புகைப்பட கலைஞர்.!

Default Image

இறந்தவராக கருதப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எடுக்க சென்ற டோனி தாமஸ், அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.

புகைப்பட கலைஞரான 43 வயதான டோனி தாமஸ், இறந்த சிவதாசனின் உடலை புகைப்படம் எடுப்பதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள போலீசாரிடம் அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக போலீசாருடன் இணைந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டோனி. இந்த நிலையில் சிவதாசனின் சடலத்தை புகைப்படம் எடுத்த போது அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.

வெளிச்சம் இல்லாத அறை என்பதால் உடலின் பக்கத்தில் சென்று தான் புகைப்படம் எடுக்க வேண்டும். அப்போது இறந்ததாக கருதிய சிவதாசன் சுவாசம் விடும் சத்தத்தை உணர்ந்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்த டோனி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாலக்காட்டில் வசித்து வரும் சிவதாசன், அவரது வீட்டில் தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்ததை அடுத்து இறந்து விட்டதாக கருதியுள்ளனர். தற்போது உயிருள்ளதை உணர்ந்த போலீசார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
US President Donald Trump
manoj bharathiraja and bharathiraja
ADMK Leaders meeti Amit shah - Edappadi Palanisamy says
shreyas iyer Shashank Singh
MKStalin
Shreyas Iyer