ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் கேரளா பத்மநாபசுவாமி கோவில்.!

Published by
Ragi

கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலை ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு கோவிலுக்கான வலைத்தளமான ‘spst. in’ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும்,பக்தர்கள் சன்னதிக்கு வரும் போது ஆன்லைனில் முன்பதிவு செய்த நகலையும், அதனுடன் அசல் ஆதார் கார்டையும் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் 35 பேர் என்ற எண்ணிக்கையில் ஒருநாளில் அதிகபட்சமாக 665 பேர் மட்டுமே கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

 கோவிலின் உள்செல்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மற்றும் சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிலில் பக்தர்களுக்கான தரிசனம் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை 6.45 வரையிலும் திறந்திருக்கும் என்று நிர்வாக அதிகாரி வி. ரத்தீஷன் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

44 seconds ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 hour ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

2 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

2 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

2 hours ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

3 hours ago