கொரோனா நோயாளிகளுக்கான அவசரகால கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம்!

Published by
Rebekal

கொரோனா நோயாளிகளுக்கு அவசர காலத்தில் பயன்படும் வகையில் கையடக்கமான ஆக்சிடென்ட் சிலிண்டர் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் தான் அதிக அளவு ஏற்படுகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பயன்படும் வகையில் தற்போது கேரளாவில் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள கொல்லத்தை மையமாகக் கொண்ட ஏரோசில் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் ஆக்சி செக்யூர் பூஸ்டர் எனும் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு இருக்குமாம், இந்த ஒரு சிலிண்டர் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக் கொள்ளலாம். 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டர் வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி, நாம் பயணம் செய்யும் போது கூட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வண்ணம் இருக்குமாம். முக கவசம் போல சிலிண்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி எளிதில் சுவாசிக்கும் வகையில் இந்த கையடக்க சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பயன்படுத்தினால் உடனடியாக நிவாரணம் பெறலாம் எனவும் இந்த கையடக்க ஆக்கிஜான் சிலிண்டரை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

1 hour ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

2 hours ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

2 hours ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

3 hours ago

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…

3 hours ago

தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3 hours ago