இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது ஒவ்வொரு மநிலமாக மீண்டுவருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேர் ஒரே நாளில் குணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது வரை 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 392 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் தற்போது வரை 102 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது புதிதாக மேலும் 10 இடங்களில் நோய் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…