இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது ஒவ்வொரு மநிலமாக மீண்டுவருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேர் ஒரே நாளில் குணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது வரை 497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 392 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் தற்போது வரை 102 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது புதிதாக மேலும் 10 இடங்களில் நோய் தீவிரம் அதிகமாக உள்ள பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…