5 கல்லூரி மாணவர்களை சமூக சேவை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

ஜூனியர்களை ராகிங் செய்ததாக செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 5 பொறியியல் மாணவர்களை விடுவித்து கொல்லம் பொது மருத்துவமனையில் 2 வார காலத்திற்கு சமூக சேவை செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு எதிரான ராகிங் வழக்கை ரத்து செய்யக்கோரி, கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.சாஹல்முகமது, அபிஷேக் அனந்தராமன், நபன் அனிஷ், அஸ்வின் மனோகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.
கொல்லம் பொது மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் சேவை செய்ய வேண்டும். சமூக சேவையை திருப்திகரமாக முடித்ததற்காக வழங்கப்படும் சான்றிதழை சமர்பித்த பின்னரே, விடுதலையானது நடைமுறைக்கு வரும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025