கொரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு அறிவித்த ரூ.20,000 கோடி நிதி..!

Published by
Sharmi

கேரளாவில் கொரோனவை எதிர்கொள்ள அரசு 20,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பை தற்போது அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி. இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்ற பினராயி விஜயன் கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். இதை தொடர்ந்து கேரளவில் சட்டசபை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது.

அதன்படி, இன்று காலை சட்டமன்றம் கூடியது. இதில் புதிய அரசின் பட்ஜெட் தொகை தாக்கல் செய்யப்பட்டது. இதை தற்போதைய கேரள அரசின் நிதி அமைச்சர் பாலகோபால் தாக்கல் செய்துள்ளார்.  அப்போது பேசிய நிதி அமைச்சர், கொரோனா முதல் அலையின் தொடக்கத்தில் ரூ.20,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து தற்போது கொரோனா இரண்டாம் அலை கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் ரூ.2,800 கோடியை சுகாதார அவசர தேவைகளுக்கும், ரூ.8,900 கோடியை மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கும், ரூ.8,300 கோடியை வட்டி மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை சரி செய்யும் பொருட்டும் இந்த நிதியை ஒதுக்கியுள்ளனர்.  மேலும், ரூ.1,000 கோடியை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கும், ரூ.500 கோடியை கொரோனா தடுப்பூசி உபகரணங்களுக்காகவும் ஒதுக்கியுள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago