சோமாடோவுடன் இணைந்து ஆன்லைன் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய கேரள அரசு முடிவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விக்கி, சோமாடோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களை சோமாடோ நிறுவன ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. முதலில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள மக்களுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க உள்ளது என்றும் மக்கள் தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்தால், அதனை சோமாடோ ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, சப்ளைக்கோ ஆன்லைன் விநியோகத்திற்காக சோமாடோவுடன் இணைந்துள்ளனர். 

ஒரு நபர் ஆன்லைனில் சப்ளைக்கோ கடைகளில் இருந்து அதிகபட்சம் 12 கிலோ வரை ஆர்டர் செய்யலாம் என்றும் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.300 ஆக இருக்க வேண்டும். டெலிவரி பயன்பாடுகளுக்கான சேவை கட்டணமாக தூரத்தின் அடிப்படையில் அவர்கள் ரூ.50 முதல் ரூ.60 வரை செலுத்த வேண்டும் என்று சப்ளைக்கோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி.எம் அலி அஸ்கர் பாஷா தெரிவித்துள்ளார்.  இதனிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சம் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக கேரளா தான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

2 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

3 hours ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

3 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

4 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

4 hours ago