உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,343 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 60,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை 12 என்றும் 1,116 பேர் கண்காணிப்பில் உள்ளனர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வைரஸ் வேகமாக பரவிவருவதால் கேரளாவில் மார்ச் மாதம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடி மையங்கள், மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…