ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதில் ஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்வப்னா மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாக பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படுகின்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் அதிரடியாக கைது செய்து கேரளா முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கொச்சினில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .
பின்னர், என்ஐஏ அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், விசாரணை இன்றுடன் நிறைவடைந்ததும் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
அப்போது, ஸ்வப்னா, அதிகாரிகளின் விசாரணையில் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் காண ஆவலுடன் இருக்கிறேன் என நீதிபதிகளிடம் கூறினார். இதனால், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கு முன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியான சரித்தை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…