#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி

Published by
kavitha

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள  மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்   தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ  அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தீவிரவாதிகளுக்கும்  மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவிற்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில்  என்ஐஏ  அதிகாரிகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.

இதில் தங்கம் கடத்தும் முக்கிய நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது என்று கடந்த  சில ஆண்டுகளாகவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள்  வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும்  இவற்றில் பெரும்பாலான தங்கம் தமிழ்நாட்டில்  தலைநகர்  சென்னைக்கு  கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தான் வழக்கை  என்ஐஏ அதிகாரிகள் மிக தீவிரமாக விசாரித்து  வருவதாகவும் மேலும்  என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர்  அதிரடியாக கைது   செய்யப்பட்டுள்ளனர்.

எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக  கைது செய்யப்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கேரள வட்டங்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

3 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

3 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

4 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

5 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

6 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

7 hours ago