30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.! மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது அடுத்தடுத்த பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர்.

தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘ தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்டக்குழுவானது, இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை  விசாரித்து மூன்று நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

அந்த அறிக்கையானது இன்று மாலை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் விதிகளை மீறியதாக அந்த குழு கூறிஇருந்தது. இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.’ என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

27 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago