கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷின் முன்ஜாமீன் வழக்கு இன்று ஐகோர்டில் விசாரணைக்கு வருகிறது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30கிலோ தங்கட்டிகளை கடத்தி வந்த சரக்கு விமானம் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த வழக்கில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் முன்னாள் தூதர ஊழியராக பணியாற்றிய சரித் மற்றும் மற்றும் அவரது மனைவிக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கேரளாவின் முதல் மந்திரியான பினராயி விஜயன் அவர்களின் முதன்மை செயலாளரான சிவசங்கரும், தலைமறைவான ஸ்வப்னாவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கரை பதவியிலிருந்து நீக்கம் செய்தனர். சமீபத்தில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கேரள உயர்நீதிமன்றத்தில் தனக்கும், இந்த கடத்தல் சம்பவத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…