கேரள தங்கம் கடத்தல் வழக்கில் 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் வருகிற 21-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் பரீத் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு என்ஐஏ இன்டர்போலைக் கோரியுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கடத்தப்பட்ட மொத்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…