கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார்.
அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். ஆனால் அந்த கும்பல் சிறுவனை தள்ளிவிட்டு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த கொல்லம் மாவட்ட காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாயாரிடம் அந்த கும்பல் 10 லட்ச ரூபாய் தொகை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!
8 வயது சிறுவன் கூறிய அடையாளங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகள் கொண்டும், அந்த கும்பலில் ஒரு பெண் இருந்ததும், கார் விவரங்களையும் கொண்டு தேட ஆரம்பித்தது. அதில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் ஸ்ரீகண்டேஸ்வரம் பகுதியில் கார் வாஷிங் நிலையத்தில் ஒரு பையில் 500 ரூபாய் கட்டுகள் 19 எண்ணம் அதாவது 7.50 லட்ச ருபாய் இருந்துள்ளது. இதனை அடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான், ஒயூர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடத்தப்பட்ட சிறுமி நின்று கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரம மைதானத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். தற்போது அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு சிறுமியின் பெற்றோரிடத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை 3 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டும், மர்ம நபர்களின் ஸ்கெட்ச் வரைபடத்தை கொண்டும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…