ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜூன் 12,13 தேதிகளில் முழு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு..!

Default Image
  • கேரளாவில் ஜூன் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு.
  • ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் 2 வது அலை மிகுந்த பேரழிவை ஏற்படுத்தி வந்தது, மேலும் உயிரிழப்புகளை தவிர்க்க கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்று தாக்கத்தை படிப்படியாக குறைத்துள்ளது.

இதையடுத்து கேரளா அரசு நேற்று மாநில அளவிலான ஊரடங்கை ஜூன் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் எதிர்பார்த்தபடி குறையாததால் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 12 (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அத்தியாவசிய கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு ஜூன் 16 வரை தொடர்ந்து இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அதாவது அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் (பேக்கேஜிங் உட்பட), கட்டுமானப் பொருட்கள் மற்றும் வங்கிகள் இப்போது செயல்படுவதைப்போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்