Categories: இந்தியா

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Published by
கெளதம்

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளாவில் 20 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரேகட்டமாக விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

காலை 8 மணி நிலவரப்படி கேரளாவில் 6.30% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. கேரளாவில் மக்கள் காலை முதல் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், காலை 8 மணி அளவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை பதிவு செய்தார்.

கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்த முதலவர் பினராயி விஜயன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான மக்கள் இயக்கம் இருப்பதாக தெரிகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு இது மிக முக்கியமான வாய்ப்பு என்பதை மக்கள் உணர்ந்து, பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கம் உருவாகி வருகிறது.

பாஜக பெரிய அளவில் பிரசாரம் செய்தாலும், பாஜகவால் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல, எந்தத் தொகுதியிலும் இரண்டாவது இடத்தைப் பெற முடியாது என்று கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

51 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

1 hour ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

2 hours ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

3 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

3 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago