கேரளா மாநிலம், கொச்சி – தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் 50 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 20 பேர் காயமுற்றனர்.
கேரள மாநிலம் மூணாறு பேருந்து டிப்போவில் இருந்து இன்று (செப்டம்பர் 12) காலை 5 மணிக்கு எர்ணாகுளத்திற்கு அரசு பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
அந்த கேரள அரசு பேருந்து கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அடிமாலி வாளரா பகுதி அருகே இருந்த சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர் கேரளா, வாளரா அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாங்குழி பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க சஜீவ்ஜோஸ் என்பது தெரியவந்தது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…