Categories: இந்தியா

#BREAKING: கேரளா குண்டுவெடிப்பு- உயிரிழப்பு 2-ஆக உயர்வு..!

Published by
murugan

களமசேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த குமாரி என்பவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக” வெடிகுண்டு வைத்தது நான் தான்’ என்று ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் பொறுப்பேற்றார். திருச்சூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் சரணடைந்துள்ளார். சரணடைவதற்கு  மூன்று மணி நேரத்துக்கு முன்பு ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றை டொமினிக் மார்ட்டின் வெளியிட்டார்.

அந்த வீடியோவை பதிவிட்டு பின்னர் தான் போலீசில் சரணடைந்தார். வீடியோ வெளியானதை தொடர்ந்து டொமினிக் மார்ட்டின்  பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டது.  அதே சமயம், டொமினிக் மார்ட்டின் அளித்த ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், தற்போது இதுபற்றி கூற முடியாது என்றும் தற்போது டொமினிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரணடைந்த டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

38 minutes ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

1 hour ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago