கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அர்ஷாத் சைக்கிள் மாடலில் ஒரு புதிய பைக்கை கண்டுபிடித்து உள்ளான்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் மாணவர்கள் பலர் தங்களுக்கு ஆர்வமான துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அர்ஷத் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். அதுவும் கடந்த ஒன்றரை மாதத்தில்.!
அர்ஷாத் தந்தை அதே பகுதியில் பைக் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். அங்கு கிடைக்கும் பொருள்களை கொண்டு அர்ஷாத் கடந்த ஒன்றரை மாதமாக ஒரு சைக்கிளை பைக்-ஆக மாற்றி வடிவமைத்துள்ளார். அந்த பைக்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றினால் 50 கிலோமீட்டர் வரை செல்லும் என அவரே குறிப்பிடுகிறார். அந்த சைக்கிளில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பல்புகள், இன்ஜின் என தேவையான அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக அர்ஷத் பத்தாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ளாராம்.
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…