இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருவனந்தபுரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை (DYFI) சேர்ந்தவர்கள் மிதில் ராஜ் ( வயது 32), ஹக் முஹம்மது (வயது 24) .இவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சராமூடு என்ற இடத்தில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த கொடூரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வெஞ்சராமூடில் நடந்ததாக தெரிவித்துள்ளனர். மிதில் மற்றும் ஹக் பைக்கில் சென்றபோது அவர்களை மர்ம கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.மிதில் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும்,மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சைபலனின்றி ஹக் உயிரிழந்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி. அசோக் குமார் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு குழுக்களிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை கொலைக்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…