கொரோனா நோயாளிகள் இருந்த படுக்கையறை காலியாகி இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாளுக்கு நாள் பறித்து கொண்டே இருக்கின்ற உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்நிலையில் டெல்லியில் 23 ஆயிரத்து 545 பேர் இதுவரை இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 500 முதல் 800 பேர் ஒரு நாளைக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் காலியாக இல்லை என கூறிவிட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் அதிக கட்டணம் தருவோரை அனுமதிப்பது தவறான முறை எனவும் பிற கட்சி தலைவர்களின் ஆதரவுடன் ஈடுபடக்கூடிய மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் எவ்வளவு படுக்கை அறைகள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான செயலியை செவ்வாய்க்கிழமை டெல்லி அரசு அறிமுகப்படுத்தும் எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…