கர்நாடகாவில் மார்ச் 7ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

Default Image

 

கர்நாடகாவில் வரும் 7-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீர்ப் பங்கீட்டைகுறைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்