Categories: இந்தியா

சுவிட்சர்லாந்து செல்வதை மக்கள் மறக்கும் வகையில் காஷ்மீர் வளர்ச்சி அடையும்- பிரதமர் மோடி

Published by
murugan

பிரதமர் மோடி நேற்று ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ. 32,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற உரையாற்றிய பிரதமர், “கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வின் போது காஷ்மீரின் அழகு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அனைவரும் அந்த இடத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள்.

இப்போது அனைவரும் காஷ்மீருக்கு வர விரும்புகிறார்கள். மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு காஷ்மீரில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். கூட்டத்தை பார்த்த அவர், இவ்வளவு தூரம் நீங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்றார்.

மாநிலங்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு!

வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தால் சிதைக்கப்பட்ட ஜம்முவின் கொந்தளிப்பான கடந்த காலத்தை நினைவுகூர்ந்த மோடி, தற்போது இணக்கமான மற்றும் செழிப்பான ஜம்மு-காஷ்மீரை நோக்கி நகர்வதைப் பாராட்டினார். ஜம்முவிடம் இருந்து ஏமாற்றம் தரும் செய்திகள் வந்த நாட்களை நாம் பார்த்திருக்கிறோம்.  இன்று, சமச்சீர் மற்றும் முழுமையான வளர்ச்சியுடன் ஒரு புதிய ஜம்முவை நாங்கள் காண்கிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரை மேலும் வளர்ச்சியடையச் செய்வோம் மற்றும் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மக்கள் சுவிட்சர்லாந்திற்கு செல்வதை மறந்துவிடும் வகையில் காஷ்மீரில் உள்கட்டமைப்பை உருவாக்குவோம்” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2019 இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்முவிற்கு மோடி மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். முன்னதாக அவர் கடந்த ஏப்ரல் 2022 இல் சம்பா மாவட்டத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago